Published : 22 Dec 2017 06:33 PM
Last Updated : 22 Dec 2017 06:33 PM
நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று அங்கு ஆட்சியமைக்கும் சூழ்நிலையில் காங்கிரஸும் அங்கு பாஜகவை அச்சுறுத்தும் வெற்றியை ருசித்த நிலையில் கோத்ரா தொகுதி குறித்து பிரியங்கா காந்தி முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
கோத்ரா தொகுதியில் மொத்தம் எண்ணப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை 1,78,911. ஆனால் மொத்தமாக பதிவான வாக்குகளோ 1,76,417. இங்கு பாஜக வேட்பாளர் 258 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
பதிவான வாக்குகளைக் காட்டிலும் அதிக வாக்குகள் எண்ணப்பட்டது எப்படி?
அதுவும் வித்தியாசம் 2,494 வாக்குகளா?
இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT