Published : 22 Dec 2017 10:39 AM
Last Updated : 22 Dec 2017 10:39 AM
2ஜி விவகாரத்தில் பாஜகவின் சதி அம்பலமாகி உள்ளதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா கூறுகையில், ‘‘2ஜி விவகாரத்தில் இறுதியாக உண்மை வெற்றி பெற்றுள்ளது. இந்த தீர்ப்பால் பாஜகவின் உண்மையற்ற, காங்கிரசுக்கு எதிரான பிரசாரம் வெளிப்பட்டுள்ளது. பிரதமரும் நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 2ஜி விவகாரத்தில் காங்கிரஸூக்கு எதிரான பாஜகவின் சதி அம்பலமாகி உள்ளது’’ என்றார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ‘‘மிகப் பெரிய ஊழலில் அரசின் உயர் பதவிகளில் இருந்தவர்களுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மை அல்ல என்பது தெளிவாகி உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT