Published : 09 Sep 2023 05:53 AM
Last Updated : 09 Sep 2023 05:53 AM

திருப்பதி அருகே லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

திருப்பதி: திருப்பதியில் இருந்து சிமென்ட் மூட்டைகள் ஏற்றிய லாரி நேற்று காலை சென்னை நோக்கி சென்றது.

திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நகரி அருகே உள்ள தர்மாபுரம் எனும் இடத்தில் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த வேன் மீது மோதியது.

இதையடுத்து திருப்பதி நோக்கி மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்த குடும்பத்தினர் மீதும், பிறகு சாலை ஓரத்தில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீதும் லாரி மோதியது.

இந்த கோர விபத்தில் பைக்கில் வந்த பூபால் அவரது 2 மகன்கள் நிதின், உமேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த வேலூரை சேர்ந்த கண்ணன் உயிரிழந்தார். மேலும் ஒருவர் நகரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x