Published : 09 Dec 2017 09:59 AM
Last Updated : 09 Dec 2017 09:59 AM
குஜராத்தில் வாக்குப்பதிவு சாதனை அளவை எட்டும் அளவிற்கு மக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் காலையிலேயே பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
‘‘குஜராத் சட்டப்பேரவைக்கு முதல்கட்டத் தேர்தல் தொடங்குகிறது. வாக்குப்பதிவு சாதனை அளவை எட்டும் வகையில் அனைவரும் திரண்டு வாக்களிக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் தங்கள் வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய அழைப்பு விடுக்கிறேன்’’ எனக்கூறியுள்ளார்
இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் பாஜகவிற்கு இந்த தேர்தல் கவுரவப் பிரச்னையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT