Published : 23 Dec 2017 04:31 PM
Last Updated : 23 Dec 2017 04:31 PM

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: முன்னாள் முதல்வர் ஜகன்நாத் மிஸ்ரா விடுதலை

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 2-வது வழக்கில் இருந்து பிஹார் முன்னாள் முதல்வர் ஜகன்நாத் மிஸ்ராவை, ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 23- 2017) இன்று விடுவித்துள்ளது.

பிஹாரில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக புகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் உள்ளிட்ட 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜகன்நாத் மிஸ்ராவும் ஒருவர்.

அம்மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த ஜகன்நாத் மிஸ்ரா, பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள கட்சியில் சேர்ந்தார்.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஜகன்நாத் மிஸ்ராவுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததையடுத்த அவர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய ராஞ்சி நீதிமன்றம் ஜகன்நாத் மிஸ்ராவை விடுவித்து உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x