Published : 23 Dec 2017 09:27 AM
Last Updated : 23 Dec 2017 09:27 AM
2ஜி வழக்கில் என் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்பி உள்ளிட்ட அனைவரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்றுமுன்தினம் விடுதலை செய்தது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று பங்கேற்ற கனிமொழி எம்பியிடம், 2ஜி வழக்கு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறியதாவது: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் திமுக மீது அபாண்டமாக பழிசுமத்தப்பட்டது. எங்கள் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கற்பனையான இழப்பின் பெயரில் 2ஜி வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்று ஆரம்பம் முதலே கூறிவந்தோம். அதையே தற்போது நீதிபதி கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT