Published : 23 Dec 2017 09:30 AM
Last Updated : 23 Dec 2017 09:30 AM
எல்லைப் பிரச்சினை குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி யாங் ஜெய்சி ஆகியோர் டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின் இருவரும் நிருபர்களிடம் கூறியபோது, பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது என்று தெரிவித்தனர்.
பின்னர் அஜித் தோவலும், யாங் ஜெய்சியும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அவர்களிடம் பிரதமர் மோடி கூறியபோது, இந்தியா, சீனா இடையே நல்லுறவு நீடிப்பது இந்த பிராந்தியத்துக்கு மட்டுமல்ல, உலகிற்கே நன்மையாக அமையும் என்று தெரிவித்தார்.
டோக்லாம் பிரச்சினையில் இரு நாடுகளுக்கும் இடையே 73 நாட்கள் போர் பதற்றம் நீடித்தது. எனவே எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT