Published : 10 Nov 2017 05:55 PM
Last Updated : 10 Nov 2017 05:55 PM
ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்த ஒன்று என பாஜக மூத்த தலைவர் யஸ்வந்த் சின்ஹா விமர்சித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் உதய் நாராயண் சவுத்ரி தலைமையில் பாட்னாவின் நடைபெற்ற விழாவில் சின்ஹா இதுகுறித்து பேசியுள்ளார்.
அப்போது அவர், ''ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கை சரியான ஒன்றுதான். ஆனால் அதைக் கையாண்ட விதம் தோல்வியை ஏற்படுத்தியது.
அதன் நோக்கம் பூர்த்தி செய்யப்படாததால் அந்த நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டது. இதனால் கறுப்புப் பணம் எதுவும் திரும்ப வரவில்லை. அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99% பணம் வங்கிக்குத் திரும்பியுள்ளது.
ஆனால் வழக்கம்போல மத்திய அரசு, இந்த நடவடிக்கை வெற்றி அடைந்துள்ளது என்று நிறுவ முயற்சிக்கிறது.
மோடி அரசு ஊழலுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடவில்லை. அப்படி இருந்தால் பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜே ஷா மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு ஏன் உத்தரவிடவில்லை?'' என்றார் சின்ஹா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT