Published : 29 Nov 2017 06:41 PM
Last Updated : 29 Nov 2017 06:41 PM

வெங்காய விலையை கட்டுப்படுத்துவது எங்கள் கைகளில் இல்லை: ராம் விலாஸ் பாஸ்வான் கைவிரிப்பு

வெங்காய விலையை கட்டுப்படுத்துவது எங்கள் கைகளில் இல்லை என மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.

நாட்டின் பல பகுதிகளிலும் பெரிய வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. டெல்லியில் இதன் விலை கிலோ 60 ரூபாயாக உள்ளது. இதையடுத்து வெங்காய விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவசாயத்துறை அதிகாரிகளுடன், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் டெல்லியில் இன்று (புதன் கிழமை) ஆலோசனை நடத்தினர்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘‘கடந்த நிதியாண்டில் 2.65 லட்சம் ஹெக்டேரில் வெங்காயம் சாகுபடி செய்த நிலையில் நடப்பு நிதியாண்டில் (2017 - 2018) 1.90 லட்சம் டன்களாக குறைந்துவிட்டது. இதனால் வெங்காயத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்துள்ளது. விலை குறைவாக உள்ள நாசிக் உள்ளிட்ட இடங்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எனினும் விலை குறையவில்லை. வெங்காயத்தை சிலர் பதுக்குவதும் விலை உயர்வுக்கு காரணம். மாநில அரசுகள் இணைந்தே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். வெங்காய விலையை கட்டுப்படுத்துவது எங்கள் கைகளில் இல்லை எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x