Published : 30 Nov 2017 09:22 AM
Last Updated : 30 Nov 2017 09:22 AM

மகாராஷ்டிராவை உலுக்கிய சிறுமி பலாத்கார வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினரின் மாபெரும் போராட்டத்துக்கு காரணமான 15 வயது சிறுமி பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகள் 3 பேருக்கு அகமதுநகர் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது.

மகாராஷ்டிர மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டம் கோப்பர்டி கிராமத்தில் கடந்த 2016, ஜூலை 13-ம் தேதி, 9-ம் வகுப்பு மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார்.

இது மராத்தா சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதிலும் இந்த சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஜிதேந்திர ஷிண்டே (25), சந்தோஷ் ஜி. பாவல் (30), நிதின் பைலூம் (23) ஆகிய மூவரும் குற்றவாளிகள் என கடந்த 18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மூவருக்கும் நேற்று நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பு குற்றவாளிகளுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கும் என அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகாம் கூறினார். “எனது மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது” என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x