Published : 24 Nov 2017 12:05 PM
Last Updated : 24 Nov 2017 12:05 PM
மும்பையில் அடுக்குமாடு கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது.
மூன்று மாடிகள் கொண்ட இக்கட்டிடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து மும்பை தானே மாநாகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“மும்பையின் தானே பகுதியில் உள்ள பிவான்டியில், மூன்று மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் சரிந்து விழுந்தது. இதில் பலர் சிக்கியுள்ளனர்.
மீட்புப் படையினர், தேசிய பேரிடர் குழுவினர் அப்குதியில் மீட்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை ஒருவர் பலியாகியுள்ளார். ஆறு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
கட்டிடத்தில் இன்னும் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்காலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT