Published : 24 Nov 2017 09:40 AM
Last Updated : 24 Nov 2017 09:40 AM

வியாபம் வழக்கில் 592 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

மத்தியப்பிரதேச மாநில தொழில் முறை தேர்வு வாரியம் (எம்பிபிஇபி) மாநில அரசுப் பணியாளர் தேர்வு வாரியமாக செயல்படுகிறது. மருத்துவத் துறை நியமனங்களுக்கான தேர்வுகளையும் எம்பிபிஇபி நடத்தி வருகிறது. ‘வியாபம்’ எனவும் அறியப்படும் இந்த வாரியத்தில் பல்வேறு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், 592 பேருக்கு எதிராக சிபிஐ அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வியாபம் முன்னாள் இயக்குநர் பங்கஜ் திரிவேதி உட்பட 4 முன்னாள் அதிகாரிகளின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, போபால், இந்துார் நகரின் 4 மருத்துவக் கல்லூரிகளின் தலைவர்களின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x