Published : 29 Nov 2017 12:27 PM
Last Updated : 29 Nov 2017 12:27 PM

உ.பி. உள்ளாட்சி தேர்தல்: கடைசிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் உத்தரப் பிரதேசத்தில் புதன்கிழமை அன்று மூன்றாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

இன்றைய தேர்தலில் பரேலி, சஹாரன்பூர், ஜான்சி, ஃபிரோஸாபாத் மற்றும் மொரதாபாத் ஆகிய 5 நகராட்சிகளை உள்ளடக்கிய 26 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உத்தரபிரதேசத்தில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக நவம்பர் 22-ம் தேதி தேர்தல் நடந்தது. 2-வது கட்டமாக லக்னோ, வாரணாசி, அலகாபாத் 25 மாவட்டங்களில் 26-ம் தேதி தேர்தல் நடந்தது. 1.3 கோடி வாக்காளர்கள் தங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

தேர்தல் நடக்கும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இறுதிக் கட்ட தேர்தல் இன்று (நவ.29) நடைபெறுகிறது. டிசம்பர் 1-ம் தேதி முடிவுகள் வெளியாகின்றன.

இந்த கடைசிக் கட்டத் தேர்தல் யோகி ஆதித்யநாத் அரசுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் அவரின் அமைச்சரவையில் உள்ள 12 மத்திய அமைச்சர்கள், 10 மாநில அமைச்சர்கள் இன்று தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x