Published : 24 Nov 2017 09:35 AM
Last Updated : 24 Nov 2017 09:35 AM

பிற்படுத்தப்பட்டோர் ஆணைய மசோதா மீண்டும் தாக்கல்

பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு (என்சிபிசி) அரசியல் சாசன அந்தஸ்து வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) சமூக நீதி கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது என்சிபிசி மசோதாவை மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் என்சிபிசி-க்கு முழு அதிகாரத்துடன் கூடிய அரசியல் சாசன அந்தஸ்து கிடைக்கும். இது ஓபிசி பிரிவினரின் குறைகளைக் கேட்டு அவற்றுக்கு தீர்வு காணவும் அவர்களது நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கவும் வழிவகுக்கும்’’ என்றார்.

இந்த மசோதா நிறைவேறினால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தேசிய ஆணையத்துக்கு இணையான அந்தஸ்து என்சிபிசி-க்கும் கிடைக்கும். ஓபிசி பிரிவினரின் வாக்குகளைக் கவர்வதற்காக பாஜக அரசு இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. என்சிபிசி மசோதா ஏற்கெனவே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநிலங்களவையில் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இதனால் மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்ற வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x