Published : 19 Nov 2017 10:04 AM
Last Updated : 19 Nov 2017 10:04 AM
டெல்லியில் 20-ம் தேதி முதல் விவசாயிகள் 2 நாள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் டெல்லியில் 20-ம் தேதி முதல் 2 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சபை தலைவர் அசோக் தவாலே கூறுகையில், ‘‘விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும். அதை சட்டபூர்வ உரிமையாக்க வேண்டும். கடன் சுமையில் இருந்து விவசாயிகள் முழுமையாக விடுதலை பெற வேண்டும். விவசாயிகளின் கடன்களை பரவலான முறையில் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 20-ம் தேதி முதல் 2 நாட்கள் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் கலந்து கொள்கி்ன்றனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT