Published : 29 Jul 2023 05:29 AM
Last Updated : 29 Jul 2023 05:29 AM

பீமா - கோரேகான் கலவர வழக்கில் 2 பேருக்கு ஜாமீன்

புதுடெல்லி: கடந்த 2018 ஜனவரி 1-ம் தேதி மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள பீமா -கோரேகான் பகுதியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பலர் காயம் அடைந்தனர். இதில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா, வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் பெரைரா, கவிஞர் வரவர ராவ்உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் பெரைரா ஆகியோர் 5 ஆண்டுகளாக மும்பை சிறையில் உள்ளனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ், சுதான்ஷு துலியா அமர்வு இந்த இருவருக்கும் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x