Published : 10 Nov 2017 09:01 AM
Last Updated : 10 Nov 2017 09:01 AM

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உறுதி

தமிழகத்தைபோல முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனியாக இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உறுதி அளித்துள்ளார்.

தெலங்கானா மாநில சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சிறுபான்மையினர் இடஒதுக்கீடு குறித்து பிரச்சினை எழுப்பப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பதிலளிக்கும்போது, “தமிழகத்தைப் போல, தெலங்கானா மாநிலத்திலும் முஸ்லிம்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி.க்கள் போராடவும் தயாராக உள்ளனர். கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்களின் நலனுக்காக வெறும் ரூ.932 கோடி செலவு செய்யப்பட்டது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த கடந்த மூன்றறை ஆண்டு காலத்தில் முஸ்லிம்களின் நலத் திட்டங்களுக்காக ரூ.2,146 கோடி செலவு செய்துள்ளோம்” என்றார்.

மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி கூறினார். இதனால் அவையில் சிறிது நேரம் உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x