Published : 06 Nov 2017 03:53 PM
Last Updated : 06 Nov 2017 03:53 PM
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அருணாச்சலப் பிரதேச பயணம் அமைதிக்கு உகந்ததல்ல என்று சீனா தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சா மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று சென்ற நிர்மலா சீதாராமன், அங்குள்ள ராணுவத்தினரைச் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங், ''இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் அருணாச்சலப் பிரதேசப் பயணத்தில் சீனாவின் நிலைப்பாட்டை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
சீன - இந்திய எல்லையின் கிழக்குப் பகுதி சர்ச்சைக்குரியது. எனவே இந்தியத் தரப்பில் இருந்து சர்ச்சைக்குரிய பகுதிக்கான பயணம், அதன் அமைதிக்கு உகந்ததல்ல.
பேச்சுவார்த்தை மற்றும் உகந்த சூழ்நிலை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், இந்திய தரப்பு சீன தரப்புடன் இணைந்து செயலாற்ற வேண்டும்'' என்றார்.
முன்னதாக சிக்கிம் மாநிலத்தில் இந்திய - சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்களை, நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசியதை அந்நாடு வரவேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT