Published : 24 Nov 2017 09:34 AM
Last Updated : 24 Nov 2017 09:34 AM
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினர் கடந்த 21-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் மாதத்தில் கூடுவது வழக்கம். ஆனால், எவ்வித காரணமும் இல்லாமல் நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டினால், அரசின் தவறான கொள்கைகள் மற்றும் ஊழல் புகார்களை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும் என அரசு கருதுகிறது. இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் வழக்கப்படி இந்த மாதத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் விட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே, உடனடியாக குளிர்கால கூட்டத் தொடரை கூட்டுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT