Last Updated : 23 Mar, 2019 09:26 AM

 

Published : 23 Mar 2019 09:26 AM
Last Updated : 23 Mar 2019 09:26 AM

பெங்களூருவில் பிரகாஷ் ராஜ் வேட்பு மனு தாக்கல்

நடிகர் பிரகாஷ் ராஜ் (53) நேற்று பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதே தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.சி.மோகனும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அவர் ஏற்கெனவே இரு முறை தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளதால் பிரகாஷ் ராஜுக்கு அவர் கடும் நெருக்கடியை அளிப்பார் எனத் தெரிகிறது. இந்த தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, பிரகாஷ் ராஜ் கடந்த 12-ம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.ஜி. சாலையில் போலீஸாரின் அனுமதி பெறாமல் ஒலிப்பெருக்கியை பயன்படுத்தி கூட்டம் நடத்தியதாக கப்பன் பூங்கா நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான வீடியோவானது, வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து, பிரகாஷ் ராஜ் மீது தேர்தல் விதிமுறையை மீறியதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x