Last Updated : 22 Mar, 2019 07:28 AM

 

Published : 22 Mar 2019 07:28 AM
Last Updated : 22 Mar 2019 07:28 AM

பாஜக.வில் இணைகிறார் மேலும் ஒரு என்சிபி தலைவர்

மகாராஷ்ட்ராவில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான ரஞ்சித் சிங் மோஹிதே பாட்டீல், கடந்த வாரம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இது, அம்மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான பாரதி பவார், பாஜகவில் விரைவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தமக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யாததால் அதிருப்தி அடைந்த பாரதி பவார், பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாரதி பவாரை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பலர் பாஜகவில் விரைவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x