Published : 23 Mar 2019 09:23 AM
Last Updated : 23 Mar 2019 09:23 AM

பவார், மாயாவதியால் மோடியின் வெற்றி எளிதாகி உள்ளது: சிவசேனா கருத்து

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் நேற்று வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இந்த முறை பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பார்கள் என பரவலாக பேசப்பட்டது. இதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால், தற்போது திடீரென மக்களவைத் தேர்தலில் தாங்கள் போட்டியிடவில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர். இது அவர்களின் தோல்வி பயத்தையே வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், இந்த அறிவிப்பானது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்  கூட்டணியின் வெற்றிக்கு சமிக்ஞையாக கருதப்படுகிறது.

உத்தரபிரதேசத்தை தாண்டி மாயாவதிக்கும், மகாராஷ்டிராவை தாண்டி சரத் பவாருக்கும் செல்வாக்கு கிடையாது.

இதனால், அவர்கள் இருவரும் பிரதமர் பதவிக்கான போட்டியிலிருந்து தாங்களாகவே விலகிக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக, நரேந்திர மோடிக்கு பிரதமர் பதவிக்கு செல்லும் பாதை மேலும் எளிதாகியுள்ளது. இவ்வாறு அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x