Published : 26 Feb 2019 09:39 AM
Last Updated : 26 Feb 2019 09:39 AM

வாக்கு கேட்க வருகிறார் நடிகை தனுஸ்ரீ தத்தா

வரும் மக்களவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் தொகுதியில் நடிகை தனுஸ்ரீ தத்தா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜார்க்கண்ட் மக்கள் கட்சி உள்ளிட்ட 14 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜார்க்கண்ட் மக்கள் கட்சியின் தலைவர் சன் சிங் பெஸ்ரா கூறியபோது, "எங்கள் கூட்டணி சார்பில் ஜாம்ஷெட்பூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தனுஸ்ரீ தத்தாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவரது பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார். நடிகை தனுஸ்ரீ ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர். பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்துள்ள அவர் தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்திலும் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் மீ டூ இயக்கத்தில் நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்தார். அதன்பேரிலேயே மக்களவைத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்தோம் என்று ஜார்க்கண்ட் மக்கள் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x