Published : 06 Apr 2014 05:36 PM
Last Updated : 06 Apr 2014 05:36 PM

என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

கே.ஜி. பாஸ்கரன் - மாவட்டச் செயலாளர், சி.பி.எம்.

திருநெல்வேலி தொகுதியின் பிரதான பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை. இங்கு புதிய தொழிற்சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. கங்கைகொண்டான் தொழிற்பூங்கா, நாங்குநேரி தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டும் தொழில் வாய்ப்புகள் மேம்படவில்லை. இங்கு கல்வி பயில்வோர் வெளிமாநிலம் மற்றும் பெருநகரங்களுக்குச் சென்றுதான் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. தொழில் ஆதாரங்கள் மூலம் உள்ளூரில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியது மிக அவசியம்.



ஆர். கணேசன் - அமைப்பாளர், சேவை பாரதி நல மையம்.

திருநெல்வேலி தொகுதியில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டுவருவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. விளைநிலங்களை அழிப்பதில் அரசுத் துறைகள் அனைத்தும் கைகோத்துச் செயல்படுகின்றன. இதனால் விவசாயம் கேள்விக்குறியாகும். உணவு உற்பத்தி குறையும். இதே நிலை நீடித்தால், வருங்காலத்தில் உணவுக்காக அடித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x