Published : 25 Apr 2014 09:00 AM
Last Updated : 25 Apr 2014 09:00 AM

சுனாமியாக மாறிய மோடி அலை: முன்னாள் அமைச்சர் அமித் ஷா பேச்சு

உத்தரப் பிரதேசத்தில் மோடி அலை, சுனாமியாக மாறிவிட்டது. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை பாஜக தோற்கடிக்கும் என்று அந்த மாநிலத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளரும், குஜராத் முன்னாள் அமைச்சருமான அமித் ஷா கூறினார்.

இது தொடர்பாக அமித் ஷா செய்தியாளர்களிடம் கூறியதா வது: “வாரணாசியில் வியா ழக்கிழமை நடைபெற்ற ஊர் வலத்தில் மோடிக்கு ஆதரவாக மக்களிடம் காணப்பட்ட எழுச்சி யைப் பார்க்கும்போது, மத்தியில் பாஜக அரசு அமைவது உறுதியாகி விட்டது.

இப்போது வரை உத்தரப் பிரதேசத்தில் நிலவி வந்த மோடி அலை, அவர் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு சுனாமியாக மாறிவிட்டது. இதன் தாக்கம் பிஹார் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் இருக்கும்.

இந்த சுனாமியில் உ.பி.யில் இருந்து காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சிகள் முற்றிலும் துடைத்தெறியப்படும். மத்தியில் மோடி தலைமை யிலான ஆட்சி அமைவது உறுதி” என்றார் அமித் ஷா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x