Published : 26 Dec 2022 05:37 AM
Last Updated : 26 Dec 2022 05:37 AM

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு: ஐடிஐ முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புபொதுத் தேர்வு எழுத விரும்பும் ஐடிஐ பயின்ற மாணவர்கள் இன்று (டிச.26) முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி 8-ம் வகுப்புக்கு பிறகு ஐடிஐகளில் சேர்ந்து படிப்பை முடிப்பவர்களுக்கு 10-ம் வகுப்புக்கு இணையான கல்விச் சான்றிதழும், 10-ம் வகுப்புக்கு பிறகு ஐடிஐகளில் படிப்பை முடிப்பவர்களுக்கு பிளஸ் 2 வகுப்புக்கான கல்விச் சான்றிதழும் பள்ளிக்கல்வித் துறை மூலம் அளிக்கப்படும். அதேநேரம், ஐடிஐ முடித்தவர்கள் மொழிப் பாடங்களில் தேர்ச்சி அடைய வேண்டும்.

அதன்படி, 10, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச்சில் நடக்க உள்ளது. எனவே, 8, 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்று பின்னர் ஐடிஐ படித்தவர்கள் தமிழ், ஆங்கிலப் பாடத் தேர்வில் பங்கேற்க தனித்தேர்வர்களாக இன்று (டிச. 26) முதல் ஜன.3-ம் தேதிக்குள் அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x