Published : 12 Oct 2022 04:53 AM
Last Updated : 12 Oct 2022 04:53 AM

மாணவருக்கான ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் - அக்.15 முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது

சென்னை: பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பயனளிக்கும் விதமாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கை 3 நாட்கள் நடத்துகிறது.

அக்.15, 16, 17 ஆகிய 3 நாட்களும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த ஓரிகாமி பயிலரங்கில் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் முதல் அனைவரும் பங்கேற்கலாம்.

இந்த ஓரிகாமி பயிலரங்கை நடத்தவுள்ள நிர்மல் குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓரிகாமி பயிற்சிகளைத் திறம்பட நடத்தி வருபவர். இந்த பயிலரங்கில் 10-க்கும் மேற்பட்ட கைவினைப் பணிகளைக் கற்றுத்தர உள்ளார்.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/01134 என்ற லிங்க்-கில் ரூ.353/- பதிவுக்கட்டணம் செலுத்தி, பதிவு செய்யவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலை மற்றும் கைவினைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x