Published : 04 Oct 2022 06:32 AM
Last Updated : 04 Oct 2022 06:32 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு 

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2022-23 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த செப்.12-ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆன்லைனில் விண்ணப்பிப்பது அக்.3-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைய இருந்த நிலையில் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் ஆர்.முத்துச்செல்வன் கூறும்போது, “ஆன்லைனில் வரும் 6-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதுவரை 38,676 பேர் பதிவு செய்துள்ளனர். அதில், 33,738 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x