Published : 14 Jul 2023 05:57 AM
Last Updated : 14 Jul 2023 05:57 AM

பகுதி நேர பி.இ. படிப்புக்கு ஜூலை 23 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில், அதன் கட்டுப்பாட்டில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

கோவையிலுள்ள, கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, இதற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒருங்கிணைக்கிறது. இந்நிலையில் 2023- 2024-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஜூன் 28-ம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இதுவரை 967 பேர் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்துள்ளனர்.

விண்ணப்பிக்க விரும்புவோர், https://www.ptbe-tnea.com/ என்ற இணையவழியில் ஜூலை 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2590080, 94869 77757 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x