Published : 30 May 2023 05:20 PM
Last Updated : 30 May 2023 05:20 PM

கும்பகோணத்தில் இளைஞரைத் தாக்கிய 3 பேர் கைது; திமுக செயலாளரை தேடும் போலீஸ்

கும்பகோணம்: கும்பகோணத்தில் முன்பகையில் இளைஞரைத் தாக்கிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தாக்குதலில் தொடர்புடைய திமுக செயலாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கும்பகோணம் வட்டம், திருவலஞ்சுழி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் ரஞ்சித் (25). இவர் மற்றும் இவரது உறவினர் விஷ்ணு ஆகிய 2 பேரும் நேற்று இரவு திருவலஞ்சுழி, கடைத்தெரு வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கொண்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் சீரஞ்சீவி (23), கணேசன் மகன் அன்பரசன் (30), காமராஜ் மற்றும் இவரது மகன் தேவராஜ் (20) ஆகிய 4 பேரும் ரஞ்சித், விஷ்ணு 2 பேரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த விஷ்ணு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ரஞ்சித், சுவாமிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீஸார், சீரஞ்சீவி,அன்பரசன், தேவராஜ் ஆகிய 3 பேர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், காமராஜை போலீஸார் தேடி வருகின்றனர். காமராஜ் திருவலஞ்சுழி திமுக செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கத்து.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x