Published : 11 May 2023 05:48 AM
Last Updated : 11 May 2023 05:48 AM

ஆந்திர - தமிழக எல்லையில் 5 கிலோ தங்கம் பறிமுதல்

திருப்பதி: சென்னையிலிருந்து சட்டவிரோதமாக தங்க பிஸ்கெட்டுகள் ஆந்திராவிற்கு கடத்துவதாக வந்த தகவலின் பேரில் நேற்று நாயுடுபேட்டா மற்றும் சூளூர்பேட்டா போலீஸார் ஆந்திர - தமிழக எல்லையில் திருப்பதி மாவட்டம் சூளூர் பேட்டாவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து நெல்லூருக்கு சென்று கொண்டிருந்த காரை சோதனையிட்டனர்.

அதில் 5 கிலோ தங்க பிஸ்கெட்டுகள் எவ்வித ஆவணங்களும் இன்றி கொண்டு செல்வது தெரியவந்தது. இதனைதொடர்ந்து 5 கிலோ தங்க பிஸ்கெட்டுகளை காருடன் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒருவரை சூளூர் பேட்டா போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x