Published : 13 Apr 2023 04:05 AM
Last Updated : 13 Apr 2023 04:05 AM

கோவை | பெண் காவலருக்கு தொல்லை அளித்த முன்னாள் ராணுவ வீரர் கைது

குன்னூர்: குன்னூரை சேர்ந்த 30 வயது பெண் காவலர், பணி நிமித்தமாக கோவைக்கு நேற்று சென்றார். பின்னர் அரசுப் பேருந்தில் குன்னூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அதே பேருந்தில் கோத்தகிரி அஜ்ஜூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான தர்மன் (56) என்பவரும் பயணித்தார். இவர், பெண் காவலர் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது பெண் காவலருக்கு பாலியல் ரீதியாக தர்மன் தொல்லை கொடுத்தார். இதை தட்டிக்கேட்ட பெண் காவலரை, தர்மன் தாக்கினார்.

இதையறிந்த ஓட்டுநர், காட்டேரி என்ற பகுதியில் பேருந்தை நிறுத்தி தர்மனை கீழே இறக்கி விட்டார். பெண் காவலரும் அந்த பேருந்தில் இருந்து இறங்கி தர்மனை பின் தொடர்ந்தார். இதையறிந்த தர்மன் மற்றொரு பேருந்தில் ஏறினார். அதே பேருந்தில் ஏறிய பெண் காவலர், அந்த பேருந்தின் ஓட்டுநரிடம் நடந்தவற்றை கூறினார்.

மேலும், குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் பேருந்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, சக காவலரை தொடர்பு கொண்டு, குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் காத்திருக்குமாறு அறிவுறுத்தினார். லெவல்கிராஸ் பகுதியில் பேருந்து நிறுத்தப்பட்டதும், சக காவலர் உதவியுடன் தர்மனை பிடித்த பெண் காவலர், காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தர்மனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x