Last Updated : 31 Jan, 2023 11:01 PM

 

Published : 31 Jan 2023 11:01 PM
Last Updated : 31 Jan 2023 11:01 PM

அருப்புக்கோட்டை அருகே கட்டிடத் தொழிலாளி அடித்துக் கொலை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கட்டிடத் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் கொலைசெய்யப்படுக் கிடந்தார்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துமணி (46). கட்டிடத் தொழிலாளி. நேற்று இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற முத்துமணி நள்ளிரவாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், இன்று காலை பல இடங்களில் முத்துமணியை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில், பாளையம்பட்டி அருகே புறவழிச்சாலை இணைப்பு பகுதியில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான தோட்டக் கிணறு அருகே முத்துமணி அடித்துக் கொலைசெய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். இறந்து கிடந்த முத்துமணி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும், முத்துமணியை அடித்துக் கொலை செய்தது யார் என்பது குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் அருப்புக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x