Published : 29 Jan 2023 04:35 AM
Last Updated : 29 Jan 2023 04:35 AM

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ராணிப்பேட்டையில் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாரதி நகர் காரை காட்டன் பஜார் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (28), இவர் தனியார் ஷூ கம்பெனி வாகன ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி. இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கும், சுந்தர்ராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையே, சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை என சிப்காட் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மாயமான சிறுமி மற்றும் சுந்தர்ராஜை தேடி பிடித்தனர். விசாரணையில், சிறுமியை சுந்தர்ராஜ் ஆசை வார்த்தைகள் கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தர் ராஜை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, அவரை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x