Published : 06 Jun 2022 06:24 AM
Last Updated : 06 Jun 2022 06:24 AM

சோழவரம் அருகே தப்பியோடிய கைதி கைது

பொன்னேரி: சோழவரம் அருகே தப்பியோடிய கைதி மீண்டும் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள நெற்குன்றம் ஊராட்சியின் 1-வது வார்டு உறுப்பினர் பாப்பாத்தி அம்மாள். செக்கஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் அவரது வீட்டின் மீது கடந்த 1-ம் தேதி, மர்ம நபரால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு. அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதுகுறித்து, சோழவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், பாப்பாத்தி அம்மாளின் மகன் மீதான முன்விரோதத்தில் விக்னேஷ் என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த 3-ம் தேதி அவரை கைது செய்த சோழவரம் போலீஸார், அன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக பூதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது போலீஸ் ஜீப்பில் இருந்து விக்னேஷ் தப்பினார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த சோழவரம் போலீஸார், விக்னேஷை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆவடி அருகே வீராபுரத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x