Published : 22 Apr 2022 06:00 AM
Last Updated : 22 Apr 2022 06:00 AM

அரக்கோணம் | ரயிலில் கடத்திய 4 கிலோ கஞ்சா பறிமுதல்

அரக்கோணம் ரயில்வே காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 4 கிலோ கஞ்சா பார்சல்.

அரக்கோணம்: தன்பாத் விரைவு ரயிலில் கடத்திய 4 கிலோ கஞ்சா பார்சலை ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அரக்கோணம் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர் எழில்வேந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்ற தன்பாத் விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அந்த ரயிலில் ரயில்வே காவலர்கள் குழுவினர் சோதனை யிட்டனர்.

அப்போது, ரயில் இன்ஜின் பெட்டிக்கு அருகே இருந்த முன்பதிவில்லாத பொது பெட்டியில் சோதனையிட்டதில் உரிமை கோராத 4 கஞ்சா பார்சலை கண்டறிந்தனர். சுமார் 4 கிலோ கஞ்சா பார்சலை பறிமுதல் செய்த காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x