Published : 02 Apr 2022 06:05 AM
Last Updated : 02 Apr 2022 06:05 AM

ஜோலார்பேட்டையில் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சந்தை கோடியூர் முனுசாமி நாயுடு தெருவைச் சேர்ந்தவர் மோகன்(66). இவருக்கும், இவரது தம்பி சதாசிவம்(64) என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து பிரிப்பதில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப் படுகிறது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் இருவருக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சதாசிவம் கத்தியால் அண்ணன் மோகனை குத்திவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த மோகனை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சதாசிவத்தை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x