Published : 29 Dec 2021 06:50 AM
Last Updated : 29 Dec 2021 06:50 AM

மாணவனுக்கு பாலியல் தொல்லை: இளம்பெண் கைது

பெரம்பலூர்

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின்கீழ் இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம், அம்பாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியின் மகள் ராசாத்தி(24). இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிற்சி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

அப்போது, 15 வயது மாணவர் ஒருவரை காதலித்து வந்துஉள்ளார். இவர்களது காதலை இரு வீட்டாரும் எதிர்த்து வந்தநிலையில், இருவரும் கடந்த அக்.22 அன்று வீட்டைவிட்டு வெளியேறி, பெரம்பலூர் மாவட்டம் மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள சிறுவனின் பாட்டி வீட்டுக்கு வந்தனர்.

அங்கு இருவரும் விஷம்குடித்துள்ளனர். இதையடுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் சில தினங்களில் குணமடைந்தனர். இதனிடையே, சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக ராசாத்தி மீது குன்னம் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x