பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேருக்கு வாழ்நாள் சிறை

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேருக்கு வாழ்நாள் சிறை

Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்: ​விருதுநகர் மாவட்​டம், அருப்​புக்​ கோட்டை அருகே இளம்​பெண் கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை வழக்​கில் 6 பேருக்கு வாழ்​நாள் சிறை தண்​டனை விதித்து மாவட்ட விரைவு மகளிர் நீதி​மன்​றம் தீர்ப்பு அளித்​தது.

அருப்​புக்​கோட்​டையைச் சேர்ந்த 43 வயது பெண் ஒரு​வர் 2022 ஆகஸ்ட் 22-ல் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்​சிக்​குச் சென்று விட்​டு, உறவினருடன் காரில் ஊர் திரும்​பி​னார்.

பால​வநத்​தம் - கோபாலபுரம் சாலை​யில் சென்​ற​போது, பைக்​கில் வந்த 7 பேர் கும்​பல் உறவினரைத் தாக்கி விட்​டு, அந்​தப் பெண்​ணைக் கடத்தி சென்று பாலியல் வன்​கொடுமை செய்​தது.

இதுகுறித்த புகாரின்​பேரில் அருப்​புக்​கோட்டை தாலுகா போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, கோவி​லாங்​குளத்​தைச் சேர்ந்த முன்​னாள் ராணுவ வீரர் சீனி​வாசன்​(40), மதுரை மாவட்​டம் பேரையூர் வெங்​க​டாசலபுரம் பிர​பாகரன்​(26), அவரது தம்பி விஜய்​(22), ராம்​கு​மார் (20) ஜெயக்​கு​மார்​(23), கல்​லூரி மாணவர் அழகு​முரு​கன்​(19) மற்​றும் 16 வயது சிறு​வன் ஆகிய 7 பேரைக் கைது செய்​தனர்.

பின்​னர் சீனி​வாசன், பிர​பாகரன், விஜய், ராம்​கு​மார், ஜெயக்​கு​மார் ஆகியோர் குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். சிறு​வன் மீதான வழக்கு இளஞ்​சிறார் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரு​கிறது. மற்ற 6 பேர் மீதான வழக்கு விசா​ரணை ஸ்ரீவில்​லிபுத்​தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது.

வழக்கை விசா​ரித்த நீதிபதி புஷ்ப​ராணி, குற்​றம் சுமத்​தப்​பட்ட சீனி​வாசன், பிர​பாகரன், விஜய், ராம்​கு​மார், ஜெயக்​கு​மார், அழகு​முரு​கன் ஆகியோ​ருக்கு வாழ்​நாள் சிறை தண்​டனை​யும், அழகு முரு​க​னுக்கு ரூ.65 ஆயிரம் அபராத​மும், மற்ற 5 பேருக்​கும் ரூ.70 ஆயிரம் அபராத​மும் விதித்து நேற்று தீர்ப்​பளித்​தார்.

இதில் சம்​பந்​தப்​பட்ட பிர​பாகரன் திரு​மங்​கலம் அருகே காவல் நிலை​யத்தை சூறை​யாடிய வழக்​கில் கைது செய்​யப்​பட்​டு, சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளது குறிப்பிடத்தக்கது.

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேருக்கு வாழ்நாள் சிறை
டிட்வா புயலால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு அபாயம்: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in