Published : 01 Mar 2024 06:10 AM
Last Updated : 01 Mar 2024 06:10 AM

பைக் மீது லாரி மோதியதில் பல்கலை. மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு @ திருச்சி

புதுக்கோட்டை: சென்னை தண்டையார்பேட்டைபகுதியைச் சேர்ந்த சம்பத் மகன்வல்லரசு(21). சேலம் மாவட்டம்ஆத்தூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரங்கநாதன்(22). அரியலூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நல்லான் மகன் லெனின்(19). இவர்கள் 3 பேரும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், விடுதியில் தங்கிப் படித்து வந்தனர். இவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று பல்கலை.யில் இருந்து திருச்சிக்கு சென்றுள்ளனர்.

மாத்தூர் காவல் நிலையம்அருகே சென்றபோது, அவ்வழியே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில்மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மாத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநரான வேலூரைச் சேர்ந்த கோபி (32) என்பவரை கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x