Published : 14 Dec 2023 06:10 AM
Last Updated : 14 Dec 2023 06:10 AM

125 குட்கா வியாபாரிகள் சென்னையில் கைது

சென்னை: சென்னையில் கடந்த இரு வாரங்களில் 125 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் தினமும் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 29 முதல் இந்த மாதம் 12-ம் தேதி வரையிலான 2 வார கால கண்காணிப்பில் குட்கா கடத்தல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 125 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 570கிலோ குட்கா புகையிலை பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x