Published : 24 Jul 2022 08:30 PM
Last Updated : 24 Jul 2022 08:30 PM

தமிழகத்தில் புதிதாக 1,945 பேருக்கு கரோனா; சென்னையில் 419பேருக்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 1,118 பெண்கள் 827 என மொத்தம் 1,945 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 419 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 32,343 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 78,902 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2,379 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 15,409 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. நோய் தொற்று கடந்த சில தினங்களாக குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.

தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 2,014 ஆகவும், சென்னையில் 431 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 20,279 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

1,52,200 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18,143 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 201.99 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x