Published : 21 Apr 2022 06:54 AM
Last Updated : 21 Apr 2022 06:54 AM

நாட்டில் 24 மணி நேரத்தில் 2,067 பேருக்கு கரோனா தொற்று

புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,067 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய 24 மணி நேரத்தை விட 65 சதவீதம் அதிகம். அவர்களையும் சேர்த்து இதுவரை 4 கோடியே 30 லட்சத்து 47,594 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நாடு முழுவதும் 12,340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் கரோனா தொற்றால் இதுவரை 5 லட்சத்து 22,006 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 நேரத்தில் 40 பேர் இறந்துள்ளனர்.

குணமடைவோர் 98.76 சதவீதமாக உள்ளனர். நாடு முழுவதும் 186.90 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x