Published : 06 Sep 2017 01:00 PM
Last Updated : 06 Sep 2017 01:00 PM
தனது நடிப்பில் வெளிவரவிருக்கும் 'திருட்டுப் பயலே 2' படம், தனக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று நடிகர் பாபி சிம்ஹா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாபி சிம்ஹா, 'ஜிகர்தண்டா' படத்துக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும், எதுவும் அவருக்கு குறிப்பிடத்தக்க வெற்றியைத் தரவில்லை. தற்போது சுசி கணேசன் இயக்கத்தில், 'திருட்டுப் பயலே' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் அமலா பாலும், வில்லனாக பிரசன்னாவும் நடிக்கின்றனார். ஏஜிஎஸ் நிறுவனம் இதை தயாரித்துள்ளது.
இந்தப் படம் பற்றி பேசியுள்ள பாபிசிம்ஹா, "இது என் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படம். எனக்கு மீண்டும் வெற்றியைத் தரும். இந்தப் படத்தின் மீது நம்பிக்கையாக உள்ளேன். முதல் பாகம் வெளியானபோது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது. 10 வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில், சுசி கணேசன் இயக்கத்தில் நடிப்பதை விசேஷமாக உணர்கிறேன். என் நடிப்புத் திறனை காட்ட சரியான தளத்தை இந்தப் படம் தந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT