Last Updated : 18 Aug, 2017 05:58 PM

 

Published : 18 Aug 2017 05:58 PM
Last Updated : 18 Aug 2017 05:58 PM

செப். 15-ல் வெளியாகிறது மகளிர் மட்டும்

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் 'மகளிர் மட்டும்' திரைப்படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகும் என சூர்யா அறிவித்துள்ளார்.

'குற்றம் கடிதல்' இயக்குநர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'மகளிர் மட்டும்'. இப்படத்தின் தணிக்கைப் பணிகள் முடிந்து 'யு' சான்றிதழ் பெற்ற படக்குழு சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது.

தற்போது செப்டம்பர் 15-ம் தேதி 'மகளிர் மட்டும்' வெளியாகும் என சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை சூர்யா தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்க மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தொடங்கப்பட்ட 'நாச்சியார்' படமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x