Published : 07 Sep 2017 12:34 PM
Last Updated : 07 Sep 2017 12:34 PM
திரையுலகில் நாயகனாக 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
1997-ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் உருவான 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் சூர்யா. பிறகு பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நாயகனாக வலம் வருகிறார். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாக 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் சூர்யா.
இதனை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சாதிக்க முடியாததை சாதிப்பதைப் பற்றியதே எனது கடந்த 20 வருட திரையுலக பயணம். நீங்கள் அனைவரும் அதை எனக்காக சாத்தியமாக்கினீர்கள்.
உங்கள் கைத்தட்டல் என்னை உற்சாகப்படுத்தி என் எல்லைகளை விரிவாக்க வைத்தது. உங்கள் விமர்சனம் இன்னும் சிறப்பாக நான் கற்றுக்கொள்ள உதவியது. உங்கள் ஆதரவு, சினிமாவைத் தாண்டி என்னை செல்ல வைத்தது (அகரம் அறக்கட்டளை). இதையெல்லாம் விட. உங்கள் அன்பு, இன்னும் இந்த இயந்திரத்தை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த 20 வருட பயணத்துக்கும், இனி பயணிக்க போகும் பல மைல் தூரத்துக்கும் உங்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். அனைவருக்கும் நன்றி
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT