Published : 03 Nov 2016 06:17 PM
Last Updated : 03 Nov 2016 06:17 PM
த்ரிவிக்ரம் - பவன் கல்யாண் இணையும் படத்தின் மூலம், தெலுங்கிலும் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் அனிருத்.
தமிழில் '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அப்படத்தைத் தொடர்ந்து 'எதிர் நீச்சல்', 'காக்கி சட்டை', 'வேலையில்லா பட்டதாரி', 'வேதாளம்', 'ரம்' உள்ளிட்ட 13 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
மேலும், தெலுங்கில் 'அ... ஆ', 'ப்ரூஸ்லீ தி ஃபைடர்', 'துருவா' உள்ளிட்ட பெரிய முதலீட்டு படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்திற்கு வந்தது. இதில் ஒப்பந்தமாகி பின்னர் இசை சுற்றுப்பயணம் காரணமாக விலகினார்.
இந்நிலையில், இறுதியாக தெலுங்கில் அனிருத் அறிமுகமாவது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. த்ரிவிக்ரம் - பவன்கல்யாண் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். அப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத்திடம் பேசியிருக்கிறார் த்ரிவிக்ரம். அப்படத்தின் கதைக்களம் இசைக்கு வலுவாக இருந்ததால், கண்டிப்பாக இசையமைக்கிறேன் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் அனிருத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT