Last Updated : 05 Oct, 2016 07:30 PM

 

Published : 05 Oct 2016 07:30 PM
Last Updated : 05 Oct 2016 07:30 PM

தானா சேர்ந்த கூட்டம் படத்துக்காக அணுகவில்லை: ஹன்சிகா

'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்காக தன்னை யாரும் அணுகவில்லை என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் 'சிங்கம் 3' படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. டிசம்பர் 16-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சூர்யா. அனிருத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்துக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்தின் நாயகியாக ஹன்சிகா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு "'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்காக தன்னை யாரும் அணுகவில்லை. நான் தற்போது வெவ்வேறு படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் ஹன்சிகா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x