Published : 30 May 2016 04:03 PM
Last Updated : 30 May 2016 04:03 PM
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் '2.0' படத்தின் வில்லன் வேடத்தில் நடிக்காதது ஏன் என்பதற்கான காரணத்தை கமல் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் '2.0'. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். லைக்கா நிறுவனம் சுமார் 350 கோடி பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது அக்ஷய்குமார் வேடத்தில் நடிக்க முதலில் அர்னால்டிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாத சூழலில் கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஷங்கர். ஆனால், கமல் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றவுடன் அக்ஷய்குமாரை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பு தொடங்கியது படக்குழு.
"ரஜினியும் நானும் அதிகமான படங்களில் இணைந்து நடித்தோம். இருவரும் பிரிந்து தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தோம். மீண்டும் இணைந்தால் அப்படத்தை இருவரும் இணைந்து தயாரிப்பது அல்லது இருவரில் ஒருவர் தயாரிப்பது என்று முடிவு செய்தோம். அதன்படி மட்டுமே '2.0' படத்தை ஒப்புக் கொள்ளவில்லை.
மேலும், வில்லன் வேடம் என்பதால் ஒப்புக் கொள்ளவில்லை என்பது தவறு. நானே பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறேன். தற்போது '2.0'வில் பெரிய நாயகன் தான் வில்லனாக நடித்து வருகிறார்." என்று கமல்ஹாசன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT