Published : 31 Jan 2020 09:21 AM
Last Updated : 31 Jan 2020 09:21 AM
வேந்தர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக உள்ளே வந்த ஜனனி இப்போது விண் செய்திகள் தொலைக்காட்சியில் ‘அறியாத அதிசயங்கள்’ நிகழ்ச்சி வழியே பல பயனுள்ள செய்திகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
‘‘வேலூர் பக்கம்தான் சொந்த ஊர். படிச்சதெல்லாம் வாணியம்பாடி. சின்ன வயது முதலே சிவில் சர்வீஸ் தேர்வு மீது அதிக ஈர்ப்பு உண்டு. அதுக்காக என்னை தயார்படுத்திட்டு வர்றேன். இப்போ செய்தி வாசிப்பதும், உலக நடப்புகளை தொகுத்து வழங்குவதும் சிறந்த அனுபவமா இருக்கு. இந்த நிகழ்ச்சிக்காக சேனல் குழுவினரோடு தேடித் தேடி பல தகவல்களை சேகரிக்கிறோம். இது என் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராவதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் கையில் எடுக்கணும். ஊடகம் வழியே இன்னும் பல நல்ல விஷயங்களை தொடணும். என்பதே என் விருப்பம்’’ என்கிறார் ஜனனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT